களுத்தறையைச் சேர்ந்த ஒளிப்படக் கலைஞரான அஹின்சா தெவ்திலினி சிறுவர் கேலிச்சித்திரங்களையும் டிஜிட்டல் கலையினையும் உருவாக்குவதில் அடிப்படையில் கவனம் குவிக்கின்றார்.
எமது கதைகள் கருத்திட்டத்துக்காக, சிறுமியாக இருக்கையில் மகிழ்வான வாழ்வினை வாழ்ந்து பின் தந்தையினை இழந்த பின்னர் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் பல சவால்களுக்கு முகங்கொடுக்கும் ஒரு துணிச்சல்மிக்க பெண்ணின் கதையினைச் சித்தரிக்க அஹின்சா டிஜிட்டல் கலைப் படைப்பினைப் பயன்படுத்துகின்றனார். இப்பெண் அவர் எதிர்நோக்கும் சவால்களுக்கும் இழப்புக்களுக்கும் மீண்டெழுந்தன்மையினைக் காட்டி சமூகத்தின் தீர்மானங்களுக்கு முகங்கொடுப்பதில் தொடர்ந்தும் உறுதியாக இருக்கின்றார்.